தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த அஜித் பவாரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத் பவார் நீக்கினார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பதால், கட்சி மற்றும் சின்னத்தை தனக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு தாக்கல் செய்தார். சரத்பவார் தரப்பும் மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி கட்சி மற்றும் சின்னம் அஜித் பவாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சரத் பவார் உச்சநீதிமன்றததில் மனுதாக்கல் செய்துள்ளார்.

varient
Night
Day