தேர்தல் பத்திரங்கள் விவகாரம் : எஸ்பிஐ வங்கியை கண்டித்து கர்நாடக இளைஞர் காங். போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கியை கண்டித்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு விவரங்களையும் உடனடியாக விடுவிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வழங்க வேண்டும் என்றும் மார்ச் 15க்குள் அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Night
Day