தேர்தல் பத்திரம் - பிரதமர் மோடி விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திர முறையினால் நிதி ஆதாரங்கள் மற்றும் அதன் பயனாளிகளை கண்டறிய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2014-ம் ஆண்டிற்கு முன் அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்கள் யாருக்காவது தெரியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் தனது அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர முறையால் அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்றும் அதனால் இந்த திட்டம் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டார்.     எந்த ஒரு திட்டத்திலும் குறைபாடுகள் இருக்கலாம் என்றும் அதை மேம்படுத்தி முடியும் எனக் கூறிய பிரதமர், தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதனை உணர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

Night
Day