தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க தயாராகி வரும் எஸ்.பி.ஐ.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்.பி.ஐ. தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பற்றிய விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்.பி.ஐ. வங்கி தயாராகி வருகிறது. முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வழங்க ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்துக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Night
Day