நகர்ப்புற அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கவும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்காக நகர்ப்புறங்களில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையரைச் சந்தித்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருவதாகவும் அவர்களின் வாக்களிக்கும் உரிமையை எளிதாக்க, அங்கேயே வாக்குச் சாவடிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடியோ பதிவு செய்யக் கோரியதாகவும் கூறினார்.

Night
Day