நகர மன்ற தலைவர் பதவிக்காக ரூ.40 லட்சம் பெற்றதாக அமைச்சர் ரோஜா மீது புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி மாவட்டம் புத்தூர் நகர மன்ற தலைவர் பதவிக்காக உறவினர் ஒருவர் மூலம் 40 லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஆந்திர அமைச்சர் ரோஜா மீது பெண் கவுன்சிலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். புத்தூர் நகர மன்ற 17 ஆவது வார்டு கவுன்சிலரான புவனேஸ்வரி என்பவர் திருப்பதி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், புத்தூர் நகர மன்ற தலைவர் பதவி வாங்கித் தருவதாக  ஆந்திர விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா கூறியதாகவும், அவரது உறவினரான குமாரசாமி என்பவரிடம் சத்யா என்பவர் மூலம்  3 தவணைகளில் 40 லட்ச ரூபாயை கொடுத்ததாக குறிப்பிட்டார். ஆனால் பதவி வாங்கித்தராமலும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும், அவர் ரோஜா மீது குற்றம் சாட்டினார்.

Night
Day