நடப்பாண்டு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.  


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெறப்பட்டதை விட இது 9.1 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிடைத்த மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உள்நாட்டு வருவாய் மூலம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயும், இறக்குமதி வருவாய் மூலம் 42 ஆயிரத்து 702 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 12.3 சதவீதம் அதிகமாகும். மேலும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிடைக்கப்பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாய் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day