நடுரோட்டில் பெண் உட்பட இருவரை சரமாரியாக தாக்கும் நபர் - வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் மற்றும் இளைஞரை ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ரா நகரில் நடுரோட்டில் இளம்பெண் மற்றும் இளைஞரை ஒருவர் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், பெண்ணின் அலறலை கண்டு ஒருசிலர் தாக்குதலை தடுக்க முற்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தொழிநுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, இரக்கமற்ற தாக்குதலில் ஈடுபட்டவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும், மம்தா பானர்ஜி அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

Night
Day