நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் பிரதமர் சர்மா ஒலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாள நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற கே.பி.சா்மா ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா். 275 இடங்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், கூட்டணிக் கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் சோ்த்து சா்மா ஓலிக்கு 178 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தது. மேலும் சிறிய கட்சிகளும் சா்மா ஓலிக்கு ஆதரவு என அறிவித்தன. இதையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சா்மா ஒலி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அவருக்கு ஆதரவாக 188 எம்.பி.க்கள் வாக்களித்ததால் சர்மா ஒலி அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் பிரசண்டா தலைமையிலான அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day