நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். தீர்மானத்தை தாக்கல் செய்த பின் உரையாற்றி கெஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் பொய் வழக்குகள் போடப்பட்டு கட்சிகள் உடைக்கப்படுவதும் அரசுகள் கவிழ்க்கப்படுவதையும் பார்த்து வரும் நிலையில், மதுபான கலால் வரிக் கொள்கை வழக்கு என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்ய நினைப்பதாக தெரிவித்தார். ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை மக்களிடம் நிரூபிப்பதற்காகவே நம்பிக்கை தீர்மானத்தை சட்டபேரவையில் கொண்டு வந்ததாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day