நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் அமைச்சர்கள் 5 பேர் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் எட்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதில் அமிர்தசரஸில் அம்மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான குர்மித் சிங் தாலிவால் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று காடூர் சாஹிப்பில் போக்குவரத்து துறை அமைச்சரான லால்ஜித் சிங் புல்லார், சங்ரூர் தொகுதியில் கல்வித்துறை அமைச்சர் குர்மித் சிங் மீட் ஹேயர், பாட்டியாலாவில் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங், பத்திண்டா தொகுதியில் விவசாயத்துறை அமைச்சர் குர்மீத் சிங் குடியானும் போட்டியிடுகின்றனர். ஜலந்தரில் சுஷில் குமார் ரிங்குவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது எட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day