நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கர்வா சௌத் பண்டிகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வட மாநிலங்கள் முழுவதும் உள்ள இந்துப் பெண்கள் நிர்ஜலா விரதத்தைக் கடைப்பிடித்து, நேற்று கர்வா சௌத் என்ற புனிதப் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த நாளில், பெண்கள் சந்திரன் உதிக்கும் வரை சாப்பிடுவதையோ, குடிநீர் பருகுவதையோ தவிர்த்து, தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன் படி கணவனுக்காக விரதம் இருந்த பெண்கள் நேற்று இரவு சல்லடையில் இருந்து சந்திரனைப் பார்த்த பின், தங்கள் கணவரின் கையிலிருந்து தண்ணீர் குடித்து நோன்பு முறித்தனர். குறிப்பாக ஷில்பா ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பிரபலங்களும் கர்வா சௌத் கொண்டாட்டங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

Night
Day