நாடு முழுவதும் வரும் மே 15-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கியூட் தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் 380 நகரங்களில் வரும் மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கியூட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் பல்கலைக்‍கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே 15 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்பட 13 மொழிகளில் 26 வெளிநாடு நகரங்கள், மற்றும் நாடு முழுவதும் 380 நகரங்களில் இந்த தேர்வு ஒரு நாளில் இரண்டு அல்லது 3 ஷிப்ட் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் முறை நேற்று தொடங்கியது. மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Night
Day