நாடு முழுவதும் 1,226 பேருக்கு கொரோனா புதிய வகை ஜெஎன்.1 தொற்று உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 226 பேருக்கு கொரோனாவின் புதிய வகையான 'ஜெஎன்.1' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கொரோனா மரபியல் ஆய்வக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 17 மாநிலங்களில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக கா்நாடகத்தில் 234 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆந்திராவில் 189 போ், மகாராஷ்டிராவில் 170 பேர், கேரளாவில் 156 பேர், மேற்கு வங்கத்தில் 96 பேர் மற்றும் தமிழகத்தில் 88 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா, கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day