நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்றிரவு பிரதீபா பாட்டீல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரதிபா பாட்டீலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day