நாட்டிற்காக 'ராகுல்காந்தி உயிர் தியாகம்' செய்தாரென மல்லிகார்ஜூன் கார்கே பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார் ராகுல் காந்தி என்ற வார்த்தையை திரும்பப் பெறுவதாக மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தென் மாநிலங்களுக்கு தனி நாடு கோரிய விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனை எழுந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும், இந்நாட்டுக்காக இந்திராகாந்தியும், ராகுல்காந்தியும் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றார். இதனை பாஜக விமர்சித்த நிலையில் சுதாரித்துக்கொண்ட அவர்,  ராஜீவ்காந்தி என்பதற்கு பதில் ராகுல்காந்தி என்று குறிப்பிட்ட வார்த்தையை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

Night
Day