நாட்டிலேயே 2 எம்.பி.க்கள் கொண்ட ஒரே தொகுதியாக வயநாடு இருக்கும் - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே இரண்டு எம்.பி.க்கள் கொண்ட ஒரே தொகுதியாக வயநாடு இருக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கலின்போது நடைபெற்ற பேரணியில்  பேசிய அவர், வயநாடு தனக்குச் செய்ததை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றார். உணர்வுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது, செயல் மூலம் மட்டுமே அவற்றை வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். வயநாட்டிற்கு அதிகாரப்பூர்வ எம்பி ஒருவரும் அதிகாரப்பூர்வமில்லாத எம்.பி. ஒருவரும் இருப்பார்கள் எனக் கூறிய ராகுல் காந்தி, வயநாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

Night
Day