நான் இருக்கும்வரை இடஒதுக்கீட்டை பறிக்க முடியாது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான் உயிரோடு இருக்கும் வரை வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் எனவும் ஆனால் தான் உயிரோடு இருக்கும் வரை அதை நடக்க விடமாட்டேன் எனவும் தெரிவித்தார். மேலும் ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அடக்குமுறை தொடரும் எனவும் தெரிவித்தார். 

Night
Day