நான் பாஜகவில் சேர்ந்தால் அமலாக்கத்துறை சம்மன் வருவது நின்றுவிடும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒருவேளை பாஜகவில் தாம் சேர்ந்துவிட்டால் அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் வருவதே நின்றுவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஹிந்தியில் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், அமலாக்கத்துறையால் அச்சுறுத்தப்பட்டே அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்க்கப்படுவதாகவும், அமலாக்கத்துறையின் பிடியில் இருப்பவர்கள் பாஜகவில் சேர மறுத்தால் அவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதாகவும் சாடினார். தற்போது சிறையில் உள்ள மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் இன்று பாஜகவில் சேர்ந்தால் கூட, அவர்கள் மூவரும் நாளையே பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day