நான் மனிதப்பிறவி அல்ல, கடவுள்தான் தன்னை பூமிக்கு அனுப்பினார் - மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஷாவில் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே, ஊடகம் ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டியளித்திருந்தார். அதில், தான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, தான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். மேலும், தன்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான் என்றும், ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் தன்னை பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார். தற்போது மோடியின் பேச்சு இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Night
Day