நாளை லாவோஸ் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி நாளை லாவோஸ் நாட்டுக்குச் செல்கிறார். 

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கும் நிலையில் ஆசியான்-இந்தியா இடையிலான 21-வது உச்சிமாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, லாவோஸின் வியன்டியன் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.

Night
Day