நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரளா எல்லை பகுதியில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள 13 சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 


கேரளாவில் நிபா வைரசால் இளைஞர் உயிரிழந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்- கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள சுகாதாத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை- கேரள எல்லைப்பகுதியில் உள்ள வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவைக்கு வாகனங்களில் வருபவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுப்பப்படுகின்றனர். 

Night
Day