நிலச்சரிவில் சிக்கி தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி தாய், மகன் என இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் சூழலில், தலைநகர் இம்பாலில் உள்ள டிம்தான்லாங் கிராமத்தில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் காவலர் ஒருவரின் வீடு அடித்துச்செல்லப்பட்ட நிலையில், வீட்டினுள் இருந்த காவலரின் மனைவி மற்றும் 2 வயது மகன் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட காவலர் ரிங்சின்லுங், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Night
Day