நீட் கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. எனவே நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மறுஅறிவிப்பு வரும் வரை கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Night
Day