நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க இரட்டை அடுக்குமுறை தேர்வை அமல்படுத்த தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க  இரட்டை அடுக்கு நீட் தேர்வினை நடத்துவதற்கான ஆலோசனையில் தேசிய தேர்வு முகமை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜே.இ.இ தேர்வில் மெயின்ஸ் மற்றும் அட்வான்ஸ் என இரட்டை அடுக்கு முறைகள் நடைமுறையில் உள்ளது. 

Night
Day