நீட் முறைகேடு - விசாரணை நடத்த குழு அமைப்பு - செயலாளர் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில்,  உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த  2018ம் ஆண்டு  உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது என்றும் கருணை மதிப்பெண் கொடுத்ததால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் சஞ்சய் குமார் தெரிவித்தார். நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என கூறிய அவர், எங்கும் நீட் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்தார். தவறான வினாத்தாள் காரணமாக ஆயிரத்து 600 பேருக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், முழு தேர்வு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது என கூறினார். நீட் முறைகேடு குறித்து விசாரிக்க யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும் என கூறிய சஞ்சய்குமார், தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நியமிக்கப்பட்ட குழு விசாரிக்கும் என்றும், இந்த குழு, ஒரு வாரத்தில் விசாரித்து வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சஞ்சய் குமார் தெரிவித்தார். 

Night
Day