நீட் வினாத்தாள் கசிவு - 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. ஆனால், நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகள் 13 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ், சிபிஐ முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Night
Day