நீட் வினாத்தாள் லீக் - மராட்டியத்தில் 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் உள்பட 4 பேரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக பொதுத் தேர்வு சட்டத்தின்கீழ் 
வழக்‍கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், சஞ்சய் துக்‍காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான்பதான் ஆகிய 2 பள்ளி ஆசிரியர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் பெற்றுக்‍கொண்டு நீட் தேர்வு மாணவர்களுக்‍கு முறைகேடாக விடைகள் பற்றிய தகவலை அளித்தது தெரியவந்துள்ளது. இவர்கள் முறைகேடுகளை அரங்கேற்றிய முக்‍கிய குற்றவாளிகளாக இருக்‍கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Night
Day