நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளைச் செய்கிறது இந்தியா என பாக். குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

"நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள்" என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சியால்கோட் மற்றும் ராவல்கோட் தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவுக்கு தொடர்புள்ளதாகவும் பாகிஸ்தானுக்குள் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை இந்தியா   நடத்தி வருவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்நீர் ஜெய்ஸ்வால், இது இந்தியாவிற்கு எதிராக தவறான பிரச்சாரத்தை தூண்டும் இஸ்லாமாபாத்தின் அண்மைக் கால முயற்சி எனச் சாடியுள்ளார். பாகிஸ்தான் எதை விதைக்கிறதோ அதையே அறுவடை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day