நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த 5 பேர், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். வனோத்ரி அருகே சையத் நகரில் வசிக்கும் ஷாஹிஸ்தா அன்சாரி என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள 4 சிறுவர்களை பருவமழையை ரசிப்பதற்காக புஷி அணைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் சிறுவர்கள் உட்பட 5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில், அமிமா அன்சாரி மற்றும் சிறுவர்கள் உமேரா அன்சாரி, ஷாஹிஸ்தா அன்சாரி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்ற இரு சிறுவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Night
Day