நீலகிரிக்கு அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' - வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்திற்கு 4-வது நாளாக அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள எல்லையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நிலகிரியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day