நொய்டாவில் பெட்ரோல் பங்கில் பெரும் தீ விபத்து!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெட்ரோல் பங்கில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நொய்டாவில் செக்‍டர் 37வது பகுதியில் பெட்ரோல் பங்க்‍ ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் ஓடிச் சென்றனர். 
உடனடியாக அங்கிருந்தவர்கள் தப்பி சென்றதால் உயிரிழப்பு தவிர்க்‍கப்பட்டது. 
தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் வந்து அங்கு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. தீ விபத்துக்‍கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day