பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி ரித்தேஷ் பாண்டே பாஜகவில் இணைந்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியுடன் நாடாளுமன்றத்தில் மதிய உணவு சாப்பிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி ரித்தேஷ் பாண்டே, 15 நாட்களுக்கு பின் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாக ரித்தேஷ் பாண்டே தெரிவித்தார். பல நாட்களாக தம்மை எந்த ஒரு கூட்டங்களுக்கோ, விவாதங்களுக்கோ அழைக்கவில்லை எனவும், பலமுறை மூத்த தலைவர்களை சந்திக்க முயற்சித்தும் அது நடக்கவில்லை எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயாவதிக்கு அனுப்பிய கடிதத்தில் ரித்தேஷ் பாண்டே குறிப்பிட்டுள்ளார். இதேபோல, மற்றொரு பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான ஷியாம் சிங் யாதவ் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day