பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்ரீத் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், குர்பானிக்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜெய்ப்பூர் ஆட்டுச்சந்தையில் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்துள்ள வியாபாரி ஒருவர், நிலா உருவத்தை வயிற்றில் கொண்டுள்ள இந்த ஆட்டின் விலை 2 லட்சம் ரூபாய் என்றும், ஆட்டை வாங்குவதற்கான வாடிக்கையாளரை தேடி வருவதாகவும் தெரிவித்தார். 

Night
Day