பங்குச்சந்தைகள் புதிய உச்சம் - மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 81,700 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 287.27 புள்ளிகள் உயர்ந்து 81 ஆயிரத்து 619.99 புள்ளிகளாகவும்,  தேசியப்பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 72.30 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 907.15 புள்ளிகளாகவும் உள்ளன. 

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் காரணமாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்றமுடன் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்றைய வர்த்தக நாளின் முடிவுக்குள் இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் NTPC, BPCL, ICICI Bank, SBI and Shriram Finance ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவுக்கு விற்பனையானது.

Night
Day