பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை சந்தித்து பேசினார்.  6 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த அவர்,  அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் மக்களவை தேர்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசியல் சூழல்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

varient
Night
Day