பஞ்சாப்: 20 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 32 வயதுப் பெண் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பசான் காடிம் என்ற கிராமத்தில் 20 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 32 வயதுப் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரி தேவி என்ற அந்தப் பெண் கால்நடைகளை மேய்க்க வயலுக்குச் சென்றுள்ளார். மாலை அவர் வீடுதிரும்பாத நிலையில் தேடிச் சென்று பார்த்தபோது நாய்கள் கடித்துக் குதறிய அவரது உடல் கிடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள நாய்கள் மற்றொரு பெண்ணையும் கடித்துக் குதறியுள்ளன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day