பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரிய ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை ராஞ்சி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 31ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் எனக்கோரி ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற போது, அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Night
Day