பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணம் சம்பாதிப்பதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடிய பரீரிக்ஷா பே சர்ச்சா காணொலி நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதில் துணை நிலை ஆளுநருக்கும் பங்கிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தான் மருத்துவராக இருந்தபோதே நன்றாக சம்பாதித்துள்ளதாகவும், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Night
Day