இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
பதற்றமான ஷம்பு எல்லையை ஒரு வாரத்தில் திறக்க வேண்டும் என அரசுக்கு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை உறுதி செய்யக்கோரி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த ஜனவரி மாதம் பேரணியாக சென்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கருதி பஞ்சாப்-ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசியம் மற்றும் மருத்துவ அவசர சூழல்களை கருத்தில் கொண்டு தற்காலிக வழித்தடங்களை உருவாக்க கோரி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் ஷம்பு எல்லையை திறக்க வேண்டும் என ஹரியானா அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...