பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மகாராஷ்டிரா சென்றார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க மகாராஷ்டிர மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா சென்றுள்ளார். முதலில் வாஷிம் நகருக்குச் சென்ற அவர், போஹராதேவி ஜகதம்பா மாதா கோவிலில் தீபாராதனை காட்டி பூஜை செய்து வழிபட்டார்.

Night
Day