பள்ளி மாணவர்களுக்கு இரு வேளை குடிநீர் பிரேக் - கேரள அரசு முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் வெப்பநிலை உயர தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் நலனை காக்க நீர் அருந்த, இரு வேளையும் 5 நிமிட இடைவெளி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டிலேயே  முதன் முறையாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கேரளா, மீண்டும் குடிநீருக்கான 5 நிமிட இடைவெளியை அமல் படுத்தியுள்ளது. குடிநீர் இடைவெளியில் நீர் அருந்தும் மாணவர்களுக்கு போதிய நீர்ச்சத்து கிடைக்கவும், அவர்களுக்கு தலைவலி மற்றும் இயற்கை உபாதை எரிச்சல் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தெலங்கானா அரசுகள் இத்திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது கேரளாவும் மீண்டும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பாதுகாக்க பேருதவியாக இருக்கும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day