பள்ளி முதல்வரை இருக்கையில் இருந்து வெளியேற்றிய ஆசிரியர்கள் - வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் முதல்வரை இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரயாக்ராஜில் இயங்கி வரும் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளியில், பாருல் சாலமன் என்பவர், பள்ளியின் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர்கள் சிலர் அவரது அறைக்குள் நுழைந்து, சாலமனை இருக்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, புதிய முதல்வரை நியமித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பள்ளியில், கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றபோது, வினாத்தாள் கசிந்ததாக கூறி 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பாருல் சாலமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

varient
Night
Day