பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில உரிமையாளர்-குத்தகைதாரர் தொடர்பான வழக்கின் போது ​பெங்களூருவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியை "பாகிஸ்தான்" என்று குறிப்பிட்டு நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியிருந்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதிபதி தெரிவித்த கருத்துகள் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட அமர்வு, இது தொடர்பாக சில அடிப்படை வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day