பாஜகவின் சொல்லும் செயலும் வேறுவேறாக உள்ளது - மாயாவதி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தோ்தல் நியாயமாகவும் நோ்மையாகவும் நடைபெற்றால், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது கடினம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவின் சொல்லும் செயலும் வெவ்வேறாக இருப்பதால், மீண்டும் ஆட்சியமைப்பது எளிதல்ல என்றார். கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்த காங்கிரஸ், அதனை நிறைவேற்ற போதிய அக்கறை காட்டவில்லை எனக் குறிப்பிட்ட மாயாவதி, இதே நிலைதான் தற்போது மத்திய பாஜக ஆட்சியிலும் நீடிப்பதாக கூறினார். விண்ணை முட்டும் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாகவும்  குற்றம் சாட்டினார்.

Night
Day