பாஜகவின் முறைகேடுகளை தோலுரித்து காட்டுவேன் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்றால் தம்மிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபானகொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி இருப்பதாகவும், ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் 4 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 10 ஆண்டுகள்தான் ஆகிறது என்றும், இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்வதாகவும் குறிப்பிட்ட கெஜ்ரிவால், தங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பா.ஜ.க. ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்தார். 

varient
Night
Day