பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் என அறிவித்தால், டெல்லியில் பிரதமர் மோடிக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் என அறிவித்தால், டெல்லி தேர்தலில் பிரதமர் மோடிக்காக தான் பிரச்சாரம் செய்வதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.டெல்லியில் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி அரசு தனது 10 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று மக்கள் சொல்வதாக கூறினார். பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி என்பது இரட்டைக் கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்றும் சாடினார். டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், 90-களில் மும்பையில் நடந்த நிழல் உலக ஆட்சியுடன் ஒப்பிடும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.  

Night
Day