பாஜக எம்.பி பிரக்யாவின் அசௌகரியத்துக்கு ஆகாசா நிறுவனம் வருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி விமான நிலையத்தில் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாவுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து, உடனடியாக விசாரணை நடத்தப்படும் என ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கடந்த வியாழக்கிழமை, மும்பையிலிருந்து டெல்லிக்கு ஆகாசா ஏர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிறகு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் பணி மேலாளர் மற்றும் அதிகாரிகள் சாத்வி பிரக்யாவை உடனடியாக வெளியேறவிடாமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. வேண்டுமென்றே தாமதிக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட்டதாக எம்.பி பிரக்யா குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஆகாசா ஏர் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Night
Day