பாஜக தலைமை அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி இன்று போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காலை டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அழிக்கலாம் என்றாலோ, அல்லது  எதிர்க்கட்சிகளை அச்சுறுத்திவிடலாம் என பாஜக நினைத்தாலோ அது தவறானது என கூறினார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என சாடிய கோபால் ராய், இன்று காலை 10 மணிக்கு டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். 

Night
Day