பாஜக 2 நாள் தேசிய பொதுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜகவின் 2 நாள் தேசிய பொதுக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை என சுமார் 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில் நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றி உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலில் கட்சி 370 இடங்களில் வெற்றி என்ற இலக்கை அடைவதற்கான வியூகங்கள் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day